தொடரும் வன்முறைக் கும்பல்களின் அடாவடித்தனம்

நாவற்குழிப் பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து அங்கிருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று முன் தினம் திங்கள் இரவு அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் ஜன்னல்கள் , கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்ததுடன் அங்கு இருந்த தந்தை மற்றும் மகன்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பியது.

தாக்குதலில் காயமடைந்த தந்தை , இரு மகன்களையும் அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடரும் வன்முறைக் கும்பல்களின் அடாவடித்தனம்

எஸ் தில்லைநாதன்