
posted 27th September 2021
யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 15 பேர் - யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், யாழ்ப்பாணம் மாநகரக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் - வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 04 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்.
வவுனியா மாவட்டத்தில் 06 பேர் - வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், வவுனியா சுகாதார விமானப்படை முகாமில் ஒருவர்.

எஸ் தில்லைநாதன்