
posted 30th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்.பல்கலைக்கழகத்தில் திருமந்திர ஆன்மீக மாநாடு!
அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு நேற்று முன்தினம் சனி (28) ஆரம்பமானது.
இந்த மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.
பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருமூலரின் உருவப்படம் தாங்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெறும் கைலாசபதி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்று வருகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)