
posted 8th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாபெரும் போராட்டம்
மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ள தங்களது மேய்ச்சல் தரையினை கோரி 23 நாட்களாக அறவளிப்போராட்டத்தினை மேற்க்கொண்டிருந்த நிலையில் உரிய அதிகாரிகளிடமிருந்து தீர்வு கிடைக்காததால் இன்று (08) செங்கலடி பாடசாலைக்கு ஜனாதிபதி வருகை தருவதால் அவருக்கு அவர்களின் நிஜாயமான கோரிக்கையினை தெரியப்படுத்தும் முகமாக கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் மாபெரும் வீதி மறியல் போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இப்போராடட்டத்தில் பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்ததுடன் நூற்றுக்கணக்கில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பின்வருமாறு தெரிவித்தார்.
உரிமை இழந்தோம்; காணிகளையும் இழந்தோம்; உணர்வை இழக்கலாமா? தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா? எமது அறவழி போராட்டம் எமது மக்களுக்காக எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்க மட்டும் என்றும் தொடரும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)