
posted 29th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொதுச் சேவைகள் சங்கம் தீர்மானம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் பொதுச் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டம் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான திரு.எஸ் லவகுமார் ஜே.பி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தாய் சங்க பொதுச் செயலாளரும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ புஹாது ஜே பி, நிதிச் செயலாளர் க.நடராஜா , தேசிய அமைப்பாளர் எஸ் துஜியந்தன், உப தலைவர் கே.திருமாறன் உட்பட பெருந்தொகையான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இதன் போது கிழக்கு மாகாண அரச சேவையைச் சேர்ந்த இணைந்து சேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளதுடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)