நூராணியா மையவாடி சிரமதானம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நூராணியா மையவாடி சிரமதானம்

கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்முனை நூராணியா மையவாடியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இம்மையவாடியானது மாநகர சபை ஊழியர்களினால் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் திண்மக் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.

மாநகர சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம். அமீர், எம்.எம். நிஸார் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிரமதானப் பணிகளை நெறிப்படுத்தியிருந்தனர்.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் விஷேட ஆலோசனை, வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத் திட்டம் கல்முனை தமிழ் பிரிவு இந்து மயானத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இவ் வேலைத் திட்டம் மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

நூராணியா மையவாடி சிரமதானம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)