
posted 6th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நீதிபதி சரவணராஜா பதவி விலகலுக்கு தொல்பொருள் திணைக்களமே காரணம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமைக்கு தொல்பொருள் திணைக்களமே முக்கிய காரணமென முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த திங்கட்கிழமை (02) ஆரம்பித்த காலவரையறையற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக இன்றும் (06) முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி த.பரஞ்சோதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நீதிபதியால் வழங்கப்பட்ட கட்டளைகள் மற்றும் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கும் மீளாய்வுகள் விண்ணப்பங்கள் செய்வதற்கும் போதிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.
எனினும், அந்த உத்தரவை மீறி கட்டளைகளையோ தீர்ப்புக்களை மாற்றுமாறு அந்தந்த நீதிபதிகளை வற்புறுத்துவதும் அவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதும் அவர்களின் சுயாதீனமான தன்மைக்கு இடையூறாகும்.
இத்தகைய செயற்பாடுகள் ஏற்படுமாயின் நேர்மையான நீதியினை வழங்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படுமென அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)