
posted 14th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின 12.10.2023 தினம் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் 12.10.2023 காலை இடம் பெற்றது.
சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)