
posted 18th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பிரியாவிடை
கல்முனை மாநகர சபையில் ஊழியர்களாக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் கே. கந்தசாமி, ஐ. இராமச்சந்திரன் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக் ஆகியோர் குறித்த இரு ஊழியர்களினதும் நீண்ட கால அர்ப்பணிப்பு நிறைந்த உன்னத சேவைகள் பற்றி எடுத்துரைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரிவுத் தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)