
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆசிரியர்கள் மீது தாக்குதல் - கண்டித்து களமிறங்கிய ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று நேற்று வெள்ளி (27) யாழ்ப்பாணம் சென்ஸ். சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரைப் பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்டித்து இந்தப் போராட்டம் பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுபோதினி அறிக்கையின்படி சம்பளத்தை அதிகரிக்கவேண்டும், ஆசிரியர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டம் யாழ்ப்பாணத்தின் மேலும் சில பாடசாலைகளின் முன்பாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)