
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
33 வருடங்களின் பின்னர் கம்பீரமான தோற்றத்துடன் ஞானவைரவர் ஆலயம்
காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.
நாளை புதன்கிழமை (25) மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூசை வழிபாடுகள் இடம்பெறும்.
குறித்த ஆலயம் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலயச் சூழலையும், அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)