
posted 11th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
2 விசேட அதிரடிப்படையினர் பலி
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் நேற்று முன் தினம் (09) இரவு திங்கள் வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஆறு படையினர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மழையின்போது வீதியில் நின்றிருந்த மாடுகள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜீப் மோதி வீதியை ஒட்டியுள்ள சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மடுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய ஆறு அதிரடிப்படையினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)