
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
துணுக்காயில் மின் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணக்காய் விநாயகர்புரம் பகுதியில் நேற்று (27) வெள்ளி காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சார இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே மின்சாரம் தாக்கி குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார தெரிவித்தனர்.
இராமநாதக்குருக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் (வயது - 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)