
posted 9th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அதிபர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் டயகோனியா அமைப்புக்களின் அனுசரணையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அதிபர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுச் செயலமர்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கல்முனை கல்வி வலயத்தில் இருந்து முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இருபது பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் வளவாளராக கலந்து கொண்டு, பல ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்து விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
பாடசாலைச் சூழலில் அதிபர்கள் தினமும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது அதிபர்களால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கும் அவர் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)