
posted 6th October 2022
நிந்தவூரைச் சேர்ந்த வரும், சுகாதாரத்துறை சார்ந்த வருமான இளம் சமூக சேவையாளர் கலாநிதி முகம்மது ஜுனைதீன் அஹமட் ஹர்பான், சமூக சேவைக்கான மூன்று பட்டங்களுடன் கூடிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இலங்கை ஜோதிடம், மாயவியல், கலாச்சார புத்தர் அறக்கட்டளையின் 16 ஆவது ஆண்டு நிறைவுடன், வல்பொல ஸ்ரீசத்தானந்தராவண குப்த வித்தியா குருகுல முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் மேற்படி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலாநிதி அஹமட் ஹர்பனின் சிறப்பு சமூக சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் தேசபந்து, விஸ்வ அபிமானி, சாமானிய ஆகிய பட்டங்களுடனான விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை ஜோதிடம், மாயவியல் கலாச்சார புத்தர் அறக்கட்டளையின் தலைவரும், நிறுவுனருமான வணக்கத்துக்குரிய டாக்டர். வல்பொல சத்தானந்த மஹாஸ்த வீரவின் சிபார்சில் வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY