போதை மருந்து ஊசி மூலம் ஏற்றியவர்கள் கைது

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே பிறந்த நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் எழுதுமட்டுவாழ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுக் கொள்வதாகவும், பளைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் குறித்த போதை பொருளை பெற்றுக் கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள்ளார்கள்.

போதை மருந்து ஊசி மூலம் ஏற்றியவர்கள் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)