
posted 16th October 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் குடு கஞ்சா ஹிரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (14) கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் .
கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.
செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் ஹிரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு கோப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY