
posted 4th October 2022
சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான துவிச்சக்கரவண்டி சவாரியானது முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி ஜேசுசாந்தி குசாந்த்தின் தலைமையில் கோட்டைப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும், அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜாவும், விஷேட அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜா மற்றும் ஈஸ்ட் லைட் அமைப் பின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
முதல் நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் கொத்துக்களும் வழங்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதைத்தொடர்ந்து துவிச்சக்கரவண்டி சவாரி இடம்பெற்றது. இச்சவாரியில் பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களுடன் அதிதிகளும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். அத்துடன் பிள்ளைகள் கேக் வெட்டி சகபாடிகளுடன் உண்டு மகிழ்ந்தனர்.
அத்தோடு ஈஸ்ட் லைட் அமைப்பினால் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY