
posted 2nd October 2022
பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் மற்றும் கனடா கிளை உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வலி தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இணுவில் மற்றும் உடுவில் கிராமங்களில் வசிக்கின்ற இரண்டு குடும்பங்களுக்கு குறித்த அத்தியாவசிய பொருட்கள் நேற்று (01) மாலை வழங்கி வைக்கப்பட்டன. உதவிகளை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரவதனி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வழங்கி வைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY