
posted 2nd October 2022
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி இன்றும் ஞாயிறு (02) மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பூநகரி – கிராஞ்சி இலவன்குடா கடல் பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள், சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் சாதகமான முடிவை சம்பந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மீனவர்கள் உள்ளடங்கலாக மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு கை கொடுத்து மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் (30) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, மீனவர்களின் பிரச்சனைகளை குழுவினர் கேட்டறிந்தனர். இந்நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் 3ஆவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY