இரண்டாமிடத்தை பெற்றுள்ளது
இரண்டாமிடத்தை பெற்றுள்ளது

உலக நோயாளர் தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நடாத்திய மாகாண சுகாதார நிறுவனங்கிடையிலான போட்டியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை கௌரவிக்கும் முகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இப்போட்டியில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட பிரிவு தலைவர்கள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியதுடன் தமது வாழ்த்துக்களையும் பறிமாறிக் கொண்டனர். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தர முகாமைத்துவப்பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் P.G.P டாணியல் அவர்கள் இந்நிகழ்வினை இணைப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடத்தை பெற்றுள்ளது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY