
posted 26th October 2022
இன்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதரகத்தின் உதவி தூதுவர் டக்ளஸ் ஈ. சொனெக், அரசியல் மற்றும் பொருளியல் விவகாரங்களுக்கான அதிகாரி அனாமிகா சக்கரவர்த்தி ஆகியோர் மயிலிட்டிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள், இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளுக்கு சொந்தமான மக்களை சந்தித்தனர்.
இதனிடையே, நேற்றைய தினம் அமெரிக்க உதவி தூதுவர் டக்ளஸ் ஈ. சொனெக் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்தக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன், பேச்சாளர் க. சுகாஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்னை, அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக பேசப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY