
posted 28th October 2021
சாவகச்சோி-தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (28.10.2021) காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்