வவுனியாவில் கடும் மழை, இடி மின்னல் தாக்கம் எச்சரிக்கும் தா.சதானந்தன்

வவுனியாவில் இன்று புதன்கிழமை பெய்த கடும் மழையுடன் இவ்வருடம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிருந்து இன்று அதிகாலை 8.30 மணிவரையிலான நிறைவடைந்த காலப்பகுதியில் 1015.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாகவும் இவ்வருடம் பதிவாகியுள்ளது .

நேற்று மட்டும் 46.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . இடைக்கால பருவபெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்வதுடன் இடி மின்னல் தாக்கம் இருக்கும். மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும், என்றார்.

வவுனியாவில் கடும் மழை, இடி மின்னல் தாக்கம் எச்சரிக்கும் தா.சதானந்தன்

எஸ் தில்லைநாதன்