மீனவரின் படகு தீக்கிரை- மாதகல்-குசுமந்துறை கடற்கரை
மீனவரின் படகு தீக்கிரை- மாதகல்-குசுமந்துறை கடற்கரை

மாதகல்-குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ மூட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவரின் படகு தீக்கிரை- மாதகல்-குசுமந்துறை கடற்கரை

எஸ் தில்லைநாதன்