
posted 10th October 2021
வடக்கு மாகாணத்தில் இன்று ஞாயிற்றுகுகிழமை14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 116 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 05 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசலையில் 03 பேர்
முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்