
posted 29th October 2021
வவுனியா மாவட்டத்தில் 17 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் வியாழக்கிழமை (28.10.2021) 159 பேருக்கு மேற்கொள்ப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 03 பேர்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர்
நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் – ஒருவர்
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் – ஒருவர்
யாழ். போதனா வைத்தியசாலையில் - ஒருவர்

எஸ் தில்லைநாதன்