
posted 15th October 2021
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று (14.10.2021) வியாழக்கிழமை 120 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி,
யாழ். போதான மருத்துவமனையில் 5 பேர்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 3 பேர்
சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர்
சங்கானை பிரதேச மருத்துவமனையில் ஒருவர்
காங்கேசன்துறை கடற்படை முகாமில் 2 பேர்
என 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர்
வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவர்
என வவுனியா மாவட்டத்தில் 6 பேரும்
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 2 பேர்
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ஒருவர்
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவரும்
தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்