
posted 26th October 2021
மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப் பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்-
நேற்று இரவு பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றனர். இதை அவதானித்த அப் பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர்.
நீங்கள் எதற்காக இங்கு வந் தீர்கள் என்று என்று மீனவர்கள் கேட்டவேளை "கடற்படை யினர் எமக்கு இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது." என்று அவர்கள் தெரிவித்தனர் என மீனவர்கள் கூறினர்.
இதனையடுத்து மீனவர்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அவ்விடத் துக்கு வந்த பொலிஸார் மூவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இரும்பு வாங்க சென்றவர்களை காணவில்லை என தேடி அவர்களது உறவினர்கள் மாதகல் பகுதிக்கு வானில் சென்றனர்.
இதனை அவதானித்த மீனவர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக மீனவர்கள் தெரிவிக்கையில்-
"நாங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான எமது உடை மைகள் அனைத்தையும் கடலிலேயே விட்டுச் செல்கின்றோம்.
"வேறுபகுதியில் இருப்பவர்கள் வந்து இப்படி எமது கட லில் உள்ள உடைமைகளை திருடிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது?
"ஒவ்வொரு நங்கூரமும் ரூபா ஐயாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் ரூபா பெறுமதியுடையவை.
"நாங்கள் கடன்பட்டுத்தான் எமது தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குகின்றோம். இது இவ்வாறு இருக்க உடைமைகள் திருடப் பட்டால் நாங்கள் கடன் வாங்கியவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
"எங்களுக்கு தொடர்ந்து இவ்வாறு அட்டூழியங்கள் நடக்குமானால் நாங்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டிவரும்" - என்றனர்.

எஸ் தில்லைநாதன்