6 பிள்ளைகளின் தந்தை  கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்

கிளிநொச்சி - தருமபுரம் -பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கால்வாயிலிருந்து இன்று மீட்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராமலிங்கம் புஸ்பராஜ் (வயது 51) எனும் 6 பிள்ளைகளின் தந்தையாவார். இவரை காணவில்லை என்று உறவினர்கள் தேடிவந்த நிலையிலேயே நேற்று நண்பகல் கால்வாயிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

6 பிள்ளைகளின் தந்தை  கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்

எஸ் தில்லைநாதன்