
posted 2nd October 2021
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மண்டான், கரணவாய் தெற்கைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் (வயது- 16) என்பவராவார்.
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(01) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் இன்று சனிக்கிழமை(02) கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். பிரேத பரிசோதனையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மாணவன் உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்