
posted 5th October 2021
வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
167 பேருக்கு த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தில் 13 பேர்
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்
யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவர், மாணவர் ஒருவர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர்
வவுனியா மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 07 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்