
posted 23rd October 2021
இலங்கையில கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (22.10.2021) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட இந்த மரணங்களில் 05 பெண்களும், 07 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்