
posted 25th October 2021
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (24/10/2021) 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,35,962 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,03,090ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்