
posted 1st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வீதி திறந்துவைப்பு
21 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திமிலைத்தீவு டானியல் வீதியினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இணைந்து பெருந்தெருக்கள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத்தினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய குழு தலைவர் மதி ரூபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ. பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், இளைஞரணி செயலாளர் எஸ். சுரேஷ்குமார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)