
posted 7th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ் விடுதியில் உயிரிழந்த நபர்
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் நேற்று முன்தினம் (05) ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
லால் பெரேரா (வயது - 61) என்ற தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவரே உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கி இருந்த நிலையில் அறைக்கு வெளியே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)