
posted 25th November 2023
பிரிந்த உறவுகளின்
துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்று வியாழன் (23) மேலும் நான்கு மனித எச்சங்களும் துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு வியாழன் (23) ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக தற்போது தோண்டப்பட்டுள்ள மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, தோண்டப்பட்ட இடத்திற்கு வெளியிலும் மனித எச்சங்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான உத்தியோபூர்வமான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)