
posted 26th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழி நேற்றும் (26) 5 எலும்புக்கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் (26) சனிக்கிழமை 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமானது. ஆறாவது நாளான நேற்றும் அகழ்வு பணி தொடர்ந்தது.
இந்த நிலையில், நேற்று 5 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டன. அத்துடன், இலக்கத் தகடு, மணிக்கூடு, துப்பாக்கி சன்னங்கள் என்பனவும் மீட்கப்பட்டன என்று முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி க. வாசுதேவா தெரிவித்தார்.
இதேநேரம், இன்று (26) ஞாயிற்றுக்கிழமை அகழ்வுப் பணிகள் நடைபெறாது என்றும் நாளை (27) திங்கட்கிழமை முதல் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)