
posted 9th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிளினிக் பார்மசி திறந்து வைப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கிளினிக் பார்மசி திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பணிப்பாளர் திருமதி டாக்டர் எஸ்.ஆர். இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த அலகினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் பீ அப்துல் வாஜித், அவசியம் தேவையான இம் மருந்தகம் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி எஸ். ஆர். இஸ்ஸதீன் அவர்களினால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் மருந்தகத்தில் நோயாளர்கள் காத்திருப்பதை குறைக்கவும் மருந்துகளை இலகுவாக களஞ்சியப்படுத்தவும் முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், உட்பட கல்முனை ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. நபீல், பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)