
posted 6th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு
கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட் “காதிரிய்யா” குர்ஆன் மத்ரஸாவில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி பள்ளிவாசல் நிர்ருவாகிகள் மாணவர்களுக்கான குர்ஆன் வசதிகளைப் பெற்றுத்தருமாறு ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வை.டபிள்யு.எம்.ஏ பேரவையின் ஒருங்கிணைப்பில் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரினால் குறித்த 70 மாணவர்களுக்கான புனித அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது முஹ்யித்தீன் மஸ்ஜிதினுடைய நிர்வாகிகளான தலைவர் ரீ.ஏ. மஜீத், செயலாளர் எம்.எச்.ஏ. கரீம், பொருளாளர் ஏ.எம். றியாஸ், நிர்வாக உறுப்பினரான எம். இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)