
posted 13th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் தலை வெளியீடு
தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று (12) ஞாயிறு மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்துக்களின் தீபாவளி தினத்தை முன்னிட்டு இத் தபால் முத்திரை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார வெளியிட்டு வைக்க முதல் முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ. சரத்சந்திர ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கபபட்டதுடன், மதகுருமாருக்கும் வங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகருடன் வடமாகாண தபால் திணைக்கள அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமார் மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)