உள் விவகாரங்களில் சீனா தலையிடாது!

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உள் விவகாரங்களில் சீனா தலையிடாது!

இலங்கையின் உள் விவகாரங்களில் சீனா தலையிடாது என யாழ். சிவில் சமுகப் பிரதிநிதிகளிடம் கூறினார் சீனத் தூதுவர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர் நேற்று (06) திங்கள் மாலை தனியார் விடுதியில் யாழ்.மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட சீனத் தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.


அதையடுத்து சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்னைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர். இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத்தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இனப்பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்.

உள் விவகாரங்களில் சீனா தலையிடாது!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)