
posted 19th November 2022
அனுமதிப் பத்திரம் இன்றி வேப்பமரக் குற்றிகளைக் கொண்டு சென்ற ஒருவர் வெள்ளிக்கிழமை (18) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கரந்தன் சந்தியில் வைத்து கோப்பாய் பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வேப்பமரக் குற்றிகளும் இவற்றை ஏற்றிச் சென்ற வாகனமும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY