
posted 20th November 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை (19) வவுனியாவுக்கு மேற்கொண்ட விஜயத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஜனாதிபதி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்ததையடுத்து அங்கு கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அவர்களது போராட்டத்தை தடுக்கும் வகையில் வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY