
posted 18th November 2021
மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டுப் பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டன.
மாதகல் ஜே/150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் புதன்கிழமை (17.11.2021) முன்னெடுக்கப்படவிருந்தன.
காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவைத் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்து, காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்

எஸ் தில்லைநாதன்