
posted 27th November 2021
யாழ்.நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், யாழ். நகரில் சமூக நீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் தேசியக் கொடியை ஏந்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.
இதன்போது அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், தற்போதுள்ள நிலையில் இவ்வாறு அதிகளவானோர் ஒன்றுகூடிப் போராட்டங்களை நடத்த முடியாது என கூறினர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறும், இல்லாவிடின் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House