கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 25.11.2021)

இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆண்கள் 19 பேரும் பெண்கள் 8 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் ( 25.11.2021)

எஸ் தில்லைநாதன்