
posted 12th November 2021
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 3 ஆண்கள், ஒரு பெண் அடங்கலாக 4 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 ஆண்களும் 7 பெண்களுமாக 15 பேரும் உயிரிழந்தனர்.
இந்த மரணங்களுடன் நாட்டில் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 547,873 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,908 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்