
posted 20th November 2021
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 229 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று 496 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 725 ஆக உயர்வடைந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 555,929 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15,468 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 442 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் 20 ஆம் திகதி சனிக்கிழமை கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்