எரிபொருள் தாராளமாக உள்ளது - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழ். மாவட்டத்தில் தாராளமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்களை எரிபொருள் நிலையங்களில் திரளவேண்டிய அவசியம் இல்லை என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 20 வீதமான எரிபொருள் மட்டுமே சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையதில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்காக பெற்றுக் கொள்ளப்படுகிறது.

யாழ். மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடிக்க வேண்டியதில்லை என்றும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.

எரிபொருள் தாராளமாக உள்ளது - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

எஸ் தில்லைநாதன்